காண- தொலை 14
சண்டிகரின்
ராக் கார்டன்..

எங்கள் ஊரில் இருந்த அந்த கிரானைட மலை மீது அந்த வியாபாரிக்கு வெகு காலமாகவே ஒரு கண்.. நன்கு விளைந்த சிவப்பு
கிரானைட் மலை. சேட்டலிட்டில் இருந்து
அனுப்பிய படங்கள் எல்லாம் எந்த அளவு அந்த மலை உயரமாகத் தெரிகிறதோ அதை விட
பல மடங்கு ஆழமாக அது வேர் பாய்ந்து விளைந்திருக்கிறது என்றும் உலகின் மிக உயர்ந்த
கிரானைட் வகை மலை அது என்றும் சுட்டியது. வெட்டி எடுத்தால் தங்கப் பாளங்களுக்கு இணையான விலை
கிடைக்கும் என்றும் அந்த வியாபாரிக்கு நன்கு தெரிந்திருந்தது.
மலையை முழுங்க ஒரு கவித்துவமான திட்டம்
தீட்டினார். அதாவது, அரசு மலையைக் குடைந்து உள்ளே ஒரு செந்தமிழர்
அருங்காட்சியகம் அமைப்பது. குகைகளை உருவாக்கி அதில் குறளோவியங்களும் சிற்பங்களும் சமைப்பது இதன் மூலம் உலகு போற்றும் ஒரு கலைக் குகை அங்கே
உருவாகும். அப்படி மலையைக் குடையும்போது வெட்டுகிற பாறைகளை போனால் போகிறது என்று
அந்த வியாபாரிக்கு அரசாங்கம் கொடுத்து விடுவது. இதுதான் திட்டம்.
விடுவார்களா விழிப்புமிக்க நம்
ஜனங்கள். கொதித்தெழுந்தார்கள். பெரும்
போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்து அரசும் அதை ஆதரிக்கவில்லை. வியாபாரியும்
மேலே தொடரவில்லை. தப்பித்தது காலம் அளித்த கற்கொடை.

முதல்
பத்து வருடங்களுக்கு இதனை அவர் ரகசியமாக உருவாக்கி வந்தார். நள்ளிரவுகளில் மட்டுமே
இவர் வேலை பார்த்து வந்தார். 2000 சிற்பங்களுக்கு மேல் உருவாகிய போதுதான் இது
பற்றி பிறர் அறிய ஆரம்பிக்கின்றனர்.
அரசுக்கு இது பிடிக்கவில்லை. இதனை இடிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று பார்க்கும் பொது மக்கள்
பிரமிப்பின் உச்சத்திற்கு செல்கிறார்கள். நேக் சந்தின் பக்கம் ஒட்டு மொத்த
சண்டிகரும் திரண்டு நிற்பது காணும் அரசு இதன் பிரம்மாண்டம் புரிந்து கொள்கிறது.
நேக் சந்திற்கு சம்பளம் கூட்டப்படுகிறது. உதவிக்கு இன்னும் அதிக ஆட்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.
பணிவேகம் கூடுகிறது. கலை அதிசயம் தொடர்கிறது.



இதன்
தனித்துவம் கண்ட உலகின் பல நாடுகள் இதன்
சிறப்பை வியந்து நின்றன. துருக்கியோ ஒரு
படி மேல் சென்று இஸ்தான்புல்லில் அது போல் ஒரு சிறிய ராக் கார்டனை அமைத்தது.
உலகின் பெரும் சிற்பக் காட்சிகளில் எல்லாம்
நேக் சந்தின் சிற்பங்கள் தனி இடம் பிடித்துள்ளன..
தனக்கு தானே குருவாக இருந்து சுயமாக அவர்
சமைத்த இந்த அதிசய உலகத்தை புராதன சின்னமாகவும் சண்டிகரின் தனி அடையாளமாகவும் உலக
நாடுகள் அங்கீகரித்துள்ளன.
தான்
கண்ட கனவிற்குத் தனது காலத்திலேயே ஒரு பிரம்மாண்டமான வடிவம் சமைத்துச்
சாதித்த தனி ஒரு மனிதனாக அந்தக் மகா கலைஞன் தனது 90ம் வயதில் 2015 ம் வருடம் காலமானபோது
சண்டிகார் உறைந்து நின்றது.
கற்களைப் பூக்க வைத்து விட்டு அந்தக் கலைஞன்
உதிர்ந்து போனான்.








Comments
Post a Comment